“நெட்” தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு : செப்டம்பர் 9- முதல் விண்ணப்பிக்கலாம்
கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற நடத்தப்படும் தகுதித்தேர்வு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த நிலையில் 3-வது ஆண்டாக தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி யு.ஜி.சி. நெட் தேர்வு டிசம்பர் மாதம் 2-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெறும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த செப்டம்பர் 9-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கான ‘ஹால் டிக்கெட்’ வரும் நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்படும்.
தேர்வு முடிவு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வெளியாகிறது. அதேபோல், ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் நிதி உதவி பெறுவதற்கு அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழக(சி.எஸ்.ஐ.ஆர்.) யு.ஜி.சி. நெட் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கும் அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். ஹால்டிக்கெட் நவம்பர் 9-ந்தேதியும், தேர்வு டிசம்பர் 15-ந்தேதியும் நடக்கிறது. இந்த தேர்வு முடிவு டிசம்பர் 31-ந்தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் தான் நடக்கும்.