தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வு ரத்து அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு வருகிற 24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற இருந்தன. ஐகோர்ட்டு ஆணைக்கிணங்க இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.