புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்பு.
நாட்டின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கிறார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமாரை, தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். கேரளாவிலிருந்து 1988ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட ஞானேஷ் குமார், நாடாளுமன்ற விவகாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.