தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு | தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமியின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகிய வற்றுக்கு கடந்த ஏப்ரல் 20-ந்தேதியில் இருந்தும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரெ.இளங்கோவனின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்தும் கோடைவிடுமுறை விடப்பட்டது. கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம் போல் திறக்கப்படுகின்றன.