சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு | இந்தியா முழுவதும் மார்ச் 4-ந்தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.