சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வு ஆன்லைனில் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் | கணிதம், இயற்பியல், வேதியியல், விலங் கியல், தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த படிப்புகளில் உதவிப் பேராசிரியர் ஆவதற்கான ‘நெட்’ தகுதித்தேர்வை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான முதல் ‘நெட்’ தேர்வு ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ளது. கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் (ஓசி மற்றும் ஓபிசி பிரிவினர்) பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் 50 % மதிப்பெண் போதும். தற்போது இறுதி ஆண்டு படிப்போரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜெஆர்எப் பெல்லோஷிப் தகுதிக்கு வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளி கள் ஆகியோருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுடையோர் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 26-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்துள்ளவர்களின் விவரம் மே மாதம் 18-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு ஜுன் முதல் வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
Related Stories
October 31, 2022