கடந்த 20-ந் தேதி நடந்த தேர்வில் வினாத்தாள் மாறிய 16 பேருக்கு 27-ந் தேதி மறு தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு | TNPSC – Re-examination for 16 affected candidates in CESE Exam at Kancheepuram Center. கடந்த 20-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொறியியல் பணியில் அடங்கிய தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.கே.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20-ந் தேதி காலையில் 16 மாணவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. தவறுதலாக வழங்கப்பட்ட 16 மாணவர்களுக்கு மட்டும் 27-ந் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த தகவல் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.