செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர். பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு கலை கல்லூரிகளை திறப்பதற்கா வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியானது. அதில் கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் அசிரியரல்லாப் பணியாளர்கள்) கட்டாய விடுப்பில் அனுப்படுவர் என்று அறிிவக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.