தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளத்தில் ( www.tnd-alu.ac.in ) காணலாம். இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 11 மற்றும் 12-ந்தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது கலந்தாய்வுநேரம் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.