சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசுகிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். உடன் (இடமிருந்து) துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜி.நாகராஜன் உள்ளனர். படம்: வி.எம்.ஸ்ரீநிவாஸ்VM_SRINIVAAS பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 59,631 மாணவ-மாணவிகளுக்கு நேற்று கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. அவர்களுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8 முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வை ஜூலை 6-ம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் சூழலில் கலந்தாய்வின்போது முன்னுரிமை அளிக் கும் கடைசி காரணியாக இருப் பது ரேண்டம் எண் தான். இந்த நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 59,631 மாணவ-மாணவிகளுக்கு கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, பதிவாளர் எஸ்.கணேசன், அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் முருகேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமன்ட் உத்தரியராஜ், இயக்குநர் ஜி.நாகராஜன் ஆகியோர் முன்னிலை யில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 214 மாணவர்களும் 59,416 பேர் மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 78,139 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழக கோவை, மதுரை, திருநெல் வேலி மண்டலங்களில் பிஇ, பிடெக். படிப்புகள் தொடங்கப்படுவதால் தலா 240 இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் இந்த ஆண்டு புதிதாக வந்துள்ளன. அதேபோல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தும் புதிதாக 1020 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ரேண்டம் எண் ஒதுக்கீட்டை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் ஜூன் 8 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும். சென்னை அண்ணா பல்கலைக்கழக மையத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு 17-ம் தேதி வரை (கூடுதலாக 3 நாட்கள்) நடைபெறும். ஆன்லைன் கலந்தாய்வை ஜூலை 6-ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளோம். எம்பிபிஎஸ் கலந்தாய்வை பொறுத்து இந்த தேதி ஒருவேளை மாற்றப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். மாணவர் சேர்க்கை செயலா ளர் ரைமன்ட் உத்தரியராஜ் கூறும்போது, “பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஆன்லைன் பதிவின் போது பயன்படுத்திய லாக்இன்-ஐ பயன்படுத்தி தங்களின் ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம். அதோடு சான்றிதழ் சரிபார்ப்பு மையம், நாள், நேரம் ஆகிய விவரங்களையும் ஆன்லைனில் அறிந்துகொள்வதுடன் சான்றிதழ் கடிதத்தை பிடிஎப் வடிவில் இணையதளத் தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விவரங்கள் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமாகவும் அனுப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது ஆன்லைன் கலந்தாய்வு குறித்து வீடியோ மூலம் விளக்கப்படும். இந்த கலந்தாய் வில் ஒரு சுற்றுக்கு 15 ஆயிரம் பேர் அழைக்கப்படுவர். மாணவர் கள் வசதிக்காக கடந்த 3 ஆண்டுகளின் கட் ஆப் மதிப் பெண் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்” என்றார்.