
தமிழ்நாட்டில் இந்தாண்டு முதல் 11-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே, 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2025-26 கல்வி ஆண்டிக்கான பொதுத்தேர்வு ஆண்டு அட்டவணை அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கை 2025-யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். தமிழ்நாட்டில் கற்றல் திறனை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சி அளித்தல், எதிர்காலத்திற்கு ஏற்ப திறன் வளர்ப்பு, இரு மொழி கொள்கை, 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி, பொதுத்தேர்வு கிடையாது உள்ளிட்ட கொள்கைகளை அடங்கிய மாநில கல்விக்கொள்கை வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட்டது. புதிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி, மாணவர்களின் பளுவை குறைக்கும் வகையில் 11-ம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்படும். 2026-ம் ஆண்டில் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணியில் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊதியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதனால், பொதுத்தேர்வு பணிகள் அதற்கு முன்னரே நிறைவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.