
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், சித்தா பிரிவில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு மொத்தம் 27 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சித்த மருத்துவம் படித்தவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம்.
சித்த மருத்துவர் பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
உதவி மருத்துவ அதிகாரி (சித்தா) | 27 |
இவை பொதுப்பிரிவில் – 6, பிசி – 6, பிசிஎம் – 1, எம்பிசி – 5, எஸ்சி – 4, எஸ்டி – 5 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, இப்பதவிக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது. இதர பிரிவினர் 37 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 47 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
சித்தா உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு டாக்டர். எம்ஜிஆ பல்கலைக்கழகத்தின் கீழ் அல்லது அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சித்தாவில் HPIM/ GCIM/ MD/ B.I.M/ L.I.M/ B.S.M.S ஆகியவற்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மத்திய இந்திய மருத்துவ வாரியத்தில் கீழ் ‘A’ Class அல்லது ‘A ‘Special Class’ சித்தா டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் கட்டாயம் இந்திய மருத்துவ வாரியம் அல்லது தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு நிலை 22 கீழ் குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் அதிகபடியாக ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நேர்காணல் தேர்வு அல்லது வாய்வழி தேர்வு ஆகியவை கிடையாது. எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழியில் நடைபெறும் தேர்வு இரண்டு பாகம் கொண்டு நடைபெறும். தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு பாடம் என நடைபெறும். தமிழ் மொழி தாள் 10ஆம் வகுப்பு தரத்தில் 50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் நடைபெறும். இதில் தகுதி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். இதில் தகுதி பெற்றால் மட்டும்தான் முதன்மை தாள் திருத்தப்படும்.
முதன்மை தாள், சித்தா பாடத்தில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 2 மணி தேர்வு எழுத அவகாசம் அளிக்கப்படும். இதில் குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும். இரண்டு பகுதியும் கொள்குறி வகையில் நடைபெறும்.
தமிழ் வினாத்தாள் அமைக்கப்படும். நெகட்டிங் மதிப்பெண் கிடையாது. முதன்மை தாளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பணி நியமனம் வழங்கப்படும்.