
தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணி முக்கிய தேவையாக உள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இப்பதவியில் உள்ள காலிப்பணியிடங்கள் சுமார் 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,299 காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியாகி, மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், கிராம உதவியாளர் பதவிக்கான வயது வரம்பை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு வெளியான அறிவிப்பின்படி, குறைந்தபட்சம் வயது வரம்பு 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் பொதுப் பிரிவினருக்கு 30 வரையும், பிற்படுத்தப்பட்டோஅர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்/ பட்டியலினத்தவர் பழங்குடியினர் ஆகிய பிரிவினருக்கு 37 வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் கூடுதல் தளர்வு உள்ளது.
அரசாணை எண். 91, மனிதவள மேலாண்மைத் துறை 13.09.2021-படி வயது நிரண்யம் செய்ய்ப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கான சட்டம் 2016 கீழ் முன்னாள் ராணுவத்தினருக்கு 48 வரை இருக்கலாம். அதுவே, பிற்படுத்தப்படோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மனபினர்/ பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் என்றால் அவர்களுக்கு 53 வரை இருக்கலாம்.
புதிய வயது வரம்பு நிர்ணயத்தில் வயது வரம்பு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால இழப்பை ஈடுபடுத்த கூடுதலாக 2 ஆண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பில்,
பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வயது வரம்பு 39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற கணவரை இழந்த பெண்களுக்கு வயது வரம்பு 42 ஆக உயர்த்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டப்படி, மாவட்டங்களில் வட்டார அளவில் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்தாண்டு ஜூன் மாதம் மொத்தம் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியானது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் பணி முடிவடைந்து மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
கிராம உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதார்கள் கட்டாயம் தமிழை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தோல்வி அடைந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் சான்றிதழ் சமர்பித்தல் கட்டாயம் ஆகும்.
அதே போன்று, தமிழில் வாசிக்க, எழுதல் தெரிந்திருக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் உள்ள வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடாது.
இப்பதவிக்கு சைக்கிள் ஓட்டுதல், தமிழ் வாசிப்பு மற்றும் எழுதல் ஆகிய திறன் தேர்வு நடைபெறும். தொடர்ந்து, இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். திறன் தேர்வு, நேர்காணல் மற்றும் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட்டு, இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அடிப்படையில் நிலை 6-படி ரூ.11,000 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் பகுதியிலேயே அரசு பணியை பெற விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.