குரூப்-4 தேர்வில் மருத்துவ சான் றிதழை ஆன்லைனில் சமர்ப் பிக்க இயலாத மாற்றுத்திற னாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மாற்று ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் மருத்துவ சான்றிதழுக்குப் பதிலாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டையை பதிவேற்றம் செய்யலாம். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் தரவரிசை பட்டி யல் ஜூலை 30-ம் தேதி வெளி யிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக் கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் ஆகஸ்டு 27-ம் தேதி தேர்வாணை யத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. அவர்கள் அரசு இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்று செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இ-சேவை மையங் களின் பட்டியலும் இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளி யிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவக் குழுவி டம் உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்ய வேண் டும் என்று முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தால் மருத்துவச் சான்றிதழ் பெறு வதில் சிரமம் இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அக்கூட்டமைப்பின் கோரிக் கையை ஏற்று மாற்றுத்திறனாளி களுக்கு தளர்வு அளிக்கப்படு கிறது. அதன்படி, மருத்துவக் குழுவிடமிடமிருந்து பெறப் பட்ட சான்றிதழ் இல்லையெ னில் அவர்கள் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட் டால் அப்போது உரிய மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கிறேன் என்று உறுதிமொழி கடிதம் எழுதி அதையும் பதிவேற்றம் செய்திட வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய் யாத விண்ணப்பதாரர்கள் அல்லது கலந்தாய்வின்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க தவறும் விண் ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு பரிசீலிக் கப்பட மாட்டார்கள். இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 25300337 ஆகிய தொலைபேசி எண்களிலும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்